பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி | 'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | அமிதாப்பச்சன் வீட்டில் தங்க கழிப்பறையா : பரபரப்பு கிளப்பிய பாலிவுட் நடிகர் | அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம் |

சின்னத்திரையில் தொடர்களை விட ரியாலிட்டி ஷோக்கள் தான் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் எல்லா சேனல்களும் விதவிதமான ஷோக்களை உருவாக்கி ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் நாளை(அக்., 10) முதல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது கலாட்டா ராணி நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்கிற வேடிக்கை, காமெடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு 3 சுற்றுகளாக விதவிதமான போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்கள் கலாட்டா ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளை வெல்வார்கள். இந்த நிகழ்ச்சியை ஆதவன் மற்றும் ஜெயச்சந்திரன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள். நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பகல்12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.