தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் |

சினிமாவில் வாரிசு நடிகர்கள் அறிமுகமாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் திறமையும், கூடவே அதிர்ஷ்டமும் இருப்பவர்கள் தங்களுக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு நிலையாக நின்று விடுகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால் என பலரை கூறலாம். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் தனது மூத்த மகன் ரோஷனை, தற்போதைக்கு ஹீரோவாக்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். அதேசமயம் ரோஷன் தற்சமயம் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். சல்மான்கான் நடித்த தபாங்-3 படத்திலும் இவர் பணிபுரிந்துள்ளார்.
அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் நடிப்பு சம்பந்தமாக டிப்ளமோ கோர்ஸ் ஒன்றையும் படித்து வருகிறாராம் ரோஷன். சினிமாவைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு அதன் பின்னர் தனது மகனுக்கு விருப்பமான துறையை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்கிறாராம் ஸ்ரீகாந்த். விஷால், கார்த்தி போன்றவர்கள் உதவி இயக்குனர்களாக பணியாற்றிவிட்டு சினிமாவை பற்றி நன்கு அறிந்து கொண்ட பின்னரே ஹீரோவாக களத்தில் இறங்கி அதில் சாதித்தும் காட்டினார். அதே பாணியைத்தான் தனது மகனுக்கும் பின்பற்றுகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்