பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

சினிமாவில் வாரிசு நடிகர்கள் அறிமுகமாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் திறமையும், கூடவே அதிர்ஷ்டமும் இருப்பவர்கள் தங்களுக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு நிலையாக நின்று விடுகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால் என பலரை கூறலாம். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் தனது மூத்த மகன் ரோஷனை, தற்போதைக்கு ஹீரோவாக்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். அதேசமயம் ரோஷன் தற்சமயம் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். சல்மான்கான் நடித்த தபாங்-3 படத்திலும் இவர் பணிபுரிந்துள்ளார்.
அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் நடிப்பு சம்பந்தமாக டிப்ளமோ கோர்ஸ் ஒன்றையும் படித்து வருகிறாராம் ரோஷன். சினிமாவைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு அதன் பின்னர் தனது மகனுக்கு விருப்பமான துறையை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்கிறாராம் ஸ்ரீகாந்த். விஷால், கார்த்தி போன்றவர்கள் உதவி இயக்குனர்களாக பணியாற்றிவிட்டு சினிமாவை பற்றி நன்கு அறிந்து கொண்ட பின்னரே ஹீரோவாக களத்தில் இறங்கி அதில் சாதித்தும் காட்டினார். அதே பாணியைத்தான் தனது மகனுக்கும் பின்பற்றுகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்