22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
துல்கர் சல்மான் ஏற்கனவே ஹிந்தியில் இரண்டு படங்கள் நடித்துவிட்ட நிலையில் தற்போது இயக்குனர் பால்கி டைரக்ஷனில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.. இந்த நிலையில் அவரது படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர்கள் அரவிந்த்சாமியும், குஞ்சாக்கோ போபனும் ஒன்றாக விசிட் அடித்து படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.
விஷயம் இதுதான்.. அரவிந்தசாமியும் குஞ்சாக்கோ போபனும் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியில் உருவாகி வரும் ரெண்டகம் {மலையாளத்தில் 'ஒட்டு'} என்கிற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் படபிடிப்பும் துல்கர் சல்மான் படபிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகிலயே நடைபெற்று வருவதால் இப்படி திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்தனராம்.
அப்போது எடுத்துக்கொண்ட செல்பியை நடிகர் குஞ்சகோ போபன் தனது சோசியல் மிடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சீனியர் சாக்லேட் ஹீரோக்களான அரவிந்த்சாமியும் குஞ்சகோ போபனும் ஜூனியர் சாக்லேட் ஹிரோவான துல்கர் சல்மானுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்த செல்பி தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது.