14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் |
துல்கர் சல்மான் ஏற்கனவே ஹிந்தியில் இரண்டு படங்கள் நடித்துவிட்ட நிலையில் தற்போது இயக்குனர் பால்கி டைரக்ஷனில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.. இந்த நிலையில் அவரது படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர்கள் அரவிந்த்சாமியும், குஞ்சாக்கோ போபனும் ஒன்றாக விசிட் அடித்து படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.
விஷயம் இதுதான்.. அரவிந்தசாமியும் குஞ்சாக்கோ போபனும் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியில் உருவாகி வரும் ரெண்டகம் {மலையாளத்தில் 'ஒட்டு'} என்கிற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் படபிடிப்பும் துல்கர் சல்மான் படபிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகிலயே நடைபெற்று வருவதால் இப்படி திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்தனராம்.
அப்போது எடுத்துக்கொண்ட செல்பியை நடிகர் குஞ்சகோ போபன் தனது சோசியல் மிடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சீனியர் சாக்லேட் ஹீரோக்களான அரவிந்த்சாமியும் குஞ்சகோ போபனும் ஜூனியர் சாக்லேட் ஹிரோவான துல்கர் சல்மானுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்த செல்பி தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது.