பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் |
துல்கர் சல்மான் ஏற்கனவே ஹிந்தியில் இரண்டு படங்கள் நடித்துவிட்ட நிலையில் தற்போது இயக்குனர் பால்கி டைரக்ஷனில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.. இந்த நிலையில் அவரது படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர்கள் அரவிந்த்சாமியும், குஞ்சாக்கோ போபனும் ஒன்றாக விசிட் அடித்து படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.
விஷயம் இதுதான்.. அரவிந்தசாமியும் குஞ்சாக்கோ போபனும் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியில் உருவாகி வரும் ரெண்டகம் {மலையாளத்தில் 'ஒட்டு'} என்கிற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் படபிடிப்பும் துல்கர் சல்மான் படபிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகிலயே நடைபெற்று வருவதால் இப்படி திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்தனராம்.
அப்போது எடுத்துக்கொண்ட செல்பியை நடிகர் குஞ்சகோ போபன் தனது சோசியல் மிடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சீனியர் சாக்லேட் ஹீரோக்களான அரவிந்த்சாமியும் குஞ்சகோ போபனும் ஜூனியர் சாக்லேட் ஹிரோவான துல்கர் சல்மானுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்த செல்பி தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது.