சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

மலையாள திரையுலகில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் பி.உன்னிகிருஷ்ணன். இவர் தான் நடிகர் விஷாலையும் ஹன்ஷிகாவையும் வில்லன் படம் மூலமாக மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர். ஏற்கனவே மோகன்லாலை வைத்து நான்கு படங்களை இயக்கியுள்ள நிலையில், தற்போது ஐந்தாவதாக ஆராட்டு என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கி வருகிறார்.
இந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் அடுத்ததாக நடிகர் திலீப்பை வைத்து படம் இயக்க தயாராகி விட்டார் பி உன்னிக்கிருஷ்ணன். இந்த படத்தின் கதையை புலிமுருகன் பட கதாசிரியர் உதயக்ரிஷ்ணா எழுதுகிறார். இதற்கு முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திலீப்பை வைத்து கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல் என்கிற படத்தை இயக்கினார் பி உன்னிக்கிருஷ்ணன்.
இந்த இருவரது கூட்டனியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அது அமைந்தது. அதை தொடர்ந்து தற்போது இன்னொரு வெற்றிப் படத்தை கொடுப்பதற்காக இந்த கூட்டணி இணைகிறது. அதுமட்டுமல்ல கடந்த சில வருடங்களில் நடிகர் திலீப் சர்ச்சைகள் பலவற்றில் சிக்கி கடினமான சூழலில் இருந்த போது அவருக்கு பக்கபலமாக குரல் கொடுத்து வந்தவர் தான் இந்த உன்னிக்கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.