மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மலையாள திரையுலகில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் பி.உன்னிகிருஷ்ணன். இவர் தான் நடிகர் விஷாலையும் ஹன்ஷிகாவையும் வில்லன் படம் மூலமாக மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர். ஏற்கனவே மோகன்லாலை வைத்து நான்கு படங்களை இயக்கியுள்ள நிலையில், தற்போது ஐந்தாவதாக ஆராட்டு என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கி வருகிறார்.
இந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் அடுத்ததாக நடிகர் திலீப்பை வைத்து படம் இயக்க தயாராகி விட்டார் பி உன்னிக்கிருஷ்ணன். இந்த படத்தின் கதையை புலிமுருகன் பட கதாசிரியர் உதயக்ரிஷ்ணா எழுதுகிறார். இதற்கு முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திலீப்பை வைத்து கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல் என்கிற படத்தை இயக்கினார் பி உன்னிக்கிருஷ்ணன்.
இந்த இருவரது கூட்டனியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அது அமைந்தது. அதை தொடர்ந்து தற்போது இன்னொரு வெற்றிப் படத்தை கொடுப்பதற்காக இந்த கூட்டணி இணைகிறது. அதுமட்டுமல்ல கடந்த சில வருடங்களில் நடிகர் திலீப் சர்ச்சைகள் பலவற்றில் சிக்கி கடினமான சூழலில் இருந்த போது அவருக்கு பக்கபலமாக குரல் கொடுத்து வந்தவர் தான் இந்த உன்னிக்கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.