வாழ்க்கை இத்துடன் முடியவில்லை : இளைஞர்களுக்கு சமந்தா அட்வைஸ் | கணவருடன் பிரிவா? - புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்த நவ்யா நாயர் | நாகார்ஜுனா பட வாய்ப்புகளை தொடர்ந்து தவிர்க்கும் ராஷ்மிகா | விஷ்ணு மஞ்சு படத்திலிருந்து வெளியேறிய நூபுர் சனோன் | விடுதலை 2ம் பாகத்தில் இணைந்த தினேஷ், மஞ்சு வாரியர் | துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் | மீண்டும் இணையும் ‛மெட்ராஸ்' பட கூட்டணி | பணத்திற்காக கேவலமான நோக்கத்தோடு பரப்புகின்றனர் : சாய்பல்லவி காட்டம் | ரஜினி 170வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ | இறைவன் படத்திற்கு ‛ஏ' சான்றிதழ் |
மலையாள திரையுலகில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் பி.உன்னிகிருஷ்ணன். இவர் தான் நடிகர் விஷாலையும் ஹன்ஷிகாவையும் வில்லன் படம் மூலமாக மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர். ஏற்கனவே மோகன்லாலை வைத்து நான்கு படங்களை இயக்கியுள்ள நிலையில், தற்போது ஐந்தாவதாக ஆராட்டு என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கி வருகிறார்.
இந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் அடுத்ததாக நடிகர் திலீப்பை வைத்து படம் இயக்க தயாராகி விட்டார் பி உன்னிக்கிருஷ்ணன். இந்த படத்தின் கதையை புலிமுருகன் பட கதாசிரியர் உதயக்ரிஷ்ணா எழுதுகிறார். இதற்கு முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திலீப்பை வைத்து கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல் என்கிற படத்தை இயக்கினார் பி உன்னிக்கிருஷ்ணன்.
இந்த இருவரது கூட்டனியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அது அமைந்தது. அதை தொடர்ந்து தற்போது இன்னொரு வெற்றிப் படத்தை கொடுப்பதற்காக இந்த கூட்டணி இணைகிறது. அதுமட்டுமல்ல கடந்த சில வருடங்களில் நடிகர் திலீப் சர்ச்சைகள் பலவற்றில் சிக்கி கடினமான சூழலில் இருந்த போது அவருக்கு பக்கபலமாக குரல் கொடுத்து வந்தவர் தான் இந்த உன்னிக்கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.