சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மலையாள திரையுலகில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் பி.உன்னிகிருஷ்ணன். இவர் தான் நடிகர் விஷாலையும் ஹன்ஷிகாவையும் வில்லன் படம் மூலமாக மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர். ஏற்கனவே மோகன்லாலை வைத்து நான்கு படங்களை இயக்கியுள்ள நிலையில், தற்போது ஐந்தாவதாக ஆராட்டு என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கி வருகிறார்.
இந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் அடுத்ததாக நடிகர் திலீப்பை வைத்து படம் இயக்க தயாராகி விட்டார் பி உன்னிக்கிருஷ்ணன். இந்த படத்தின் கதையை புலிமுருகன் பட கதாசிரியர் உதயக்ரிஷ்ணா எழுதுகிறார். இதற்கு முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திலீப்பை வைத்து கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல் என்கிற படத்தை இயக்கினார் பி உன்னிக்கிருஷ்ணன்.
இந்த இருவரது கூட்டனியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அது அமைந்தது. அதை தொடர்ந்து தற்போது இன்னொரு வெற்றிப் படத்தை கொடுப்பதற்காக இந்த கூட்டணி இணைகிறது. அதுமட்டுமல்ல கடந்த சில வருடங்களில் நடிகர் திலீப் சர்ச்சைகள் பலவற்றில் சிக்கி கடினமான சூழலில் இருந்த போது அவருக்கு பக்கபலமாக குரல் கொடுத்து வந்தவர் தான் இந்த உன்னிக்கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.