ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக ஒரு மாதத்திற்கு முன்பு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டது. என்றாலும் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதிக்கப்பட்டது. தற்போதுதான் தமிழ் படங்கள் தியேட்டரில் வெளியாகத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூடும் இடங்களுக்கு தடைவிதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தியேட்டர்களும் மூடப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் தியேட்டர்கள் ஞாயிற்றுக் கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவுக்கு அதிகமான வசூலாகும் நாள் ஞாயிற்றுக் கிழமைதான், அந்த நாளில் தியேட்டர் மூடப்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த தடை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.