தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கன்னடத்தில் உருவான கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் பான் இந்தியா படமாகும். இந்த படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
சலார் படப்பிடிப்பில் நடக்கும் கலாட்டாக்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு வரும் ஸ்ருதி, சமீபத்தில் பிரபாஸ் தனக்கு மதிய உணவு அனுப்புவதாக சொல்லி அதை படமெடுத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது, எனக்கு பிடித்தமான டைரக்டர்களை எரிச்சலூட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என கூறியிருப்பவர், அவரை எரிச்சலூட்டுவதை தான் ரசிப்பதாக பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். அத்துடன் பிரசாந்த் நீலுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.