20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பிரகாஷ்ராஜும், மோகன் பாபுவின் மகனும் தெலுங்கு நடிகருமான விஷ்ணு மஞ்சுவும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஜீவிதா, பிரகாஷ்ராஜ் அணிக்கு தாவி அந்த அணியின் சார்பில் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தற்போது தேர்தல் சூடுபிடித்து வருகிறது. பிரகாஷ்ராஜ் கன்னடர், அவர் தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் ஆககூடாது என்று ஒரு பக்கம் பிரச்சாரம் நடந்து வருகிறது. விஷ்ணு மஞ்சு அணிக்கு என்.டி.ஆர் குடும்பமும், பிரகாஷ்ராஜூக்கு சிரஞ்சீவி குடும்பமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்திய பிரகாஷ்ராஜ் தான் வெற்றி பெற்றால் தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு 10 கோடி நன்கொடை தருவதாக கூறியதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து விஷ்ணு மஞ்சு அணியினர் வாக்களிக்கும் தகுதி படைத்த உறுப்பினர்களுக்கு கணிசமான பணம் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிரகாஷ்ராஜ் கொரோனா விதிமுறைகளை மீறி விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரகாஷ்ராஜ் "கொரோனா விதிமுறைகளை பின்பற்றிதான் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். விருந்து நிகழ்ச்சி எதுவும் நடத்தவில்லை. அரசியல் கட்சிகள் கொரோனா விதிமுறைகளை மீறி மக்களை கூட்டி நிகழ்ச்சி நடத்துவது பற்றி கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.