பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

என்றும் மார்கண்டேயன் என்று சொல்லும் அளவுக்கு இன்னும் இளமையாகவே காட்சி அளிக்கும் நடிகர் நடிகர் மம்முட்டி நேற்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். பல திசையில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. அதேசமயம் அனைவரையும் பிரமிக்க வைக்கும் விதமாக டாவின்சி சுரேஷ் என்கிற ஓவியர் 20 அடி உயரம் கொண்ட மம்முட்டியின் போர்ட்ரெய்ட் ஓவியத்தை அவரது பிறந்தநாள் பரிசாக உருவாக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
ஆம்.. சுமார் 6௦௦ மொபைல் போன்கள் மற்றும் 6000 மொபைல் போன் பயன்பாட்டிற்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை கொண்டு இந்த ஓவியத்தை உருவாக்கியுள்ளார் என்பதுதான் இந்த பிரமிப்புக்கு காரணம்.. இத்தனை போன்களையும் உதிரி பாகங்களையும் கொடுத்து இதை உருவாக்குவதற்கு பின்னணியில் தூண்டுதலாக இருந்துள்ளார் அனாஸ் என்கிற மொபைல் கடை உரிமையாளர்.. கே-பீஸ் என்பவர் தனக்கு சொந்தமாக உள்ள மினி ஹால் ஒன்றில் இதற்கான இடவசதியை ஏற்பாடு செய்து கொடுத்து உதவியுள்ளார்.