ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

மறைந்த முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக 'தலைவி' படம் உருவாகியுள்ளது. இப்படம் இந்த வாரம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரமோஷனின் ஒரு பகுதியாக சினிமா பெண் பிரபலங்களுக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவையை பரிசாக வழங்கி வருகிறது படக்குழு.
ஜெயலலிதாவுக்கு, காஞ்சிபுரம் பட்டுப்புடவை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால்தான் அழகான காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளை பரிசாக அளிக்கிறார்களாம்.
அந்தப் பரிசுடன் அனுப்பப்படும் கடிதத்தில், “பெண்களிடம் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நம்பிக்கையைக் கொண்டாடுவது தான் 'தலைவி'. உங்களது விடாமுயற்சியால் சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய உங்களது நம்பிக்கையை நாங்கள் வணங்குகிறோம். உங்களிடமுள்ள தலைவியைக் கொண்டாடுவோம். நிஜத் தலைவி ஜெயலலிதாவின் அபிமான காஞ்சிபுரம் பட்டுப் புடவையை உங்களுக்கு வழங்க விருப்பப்படுகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.