அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் |

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் கடைசியில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் கடைசியில் மீண்டும் சினிமா தியேட்டர்களைத் திறந்தார்கள். இரண்டு வாரங்களாக முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் தியேட்டர்களில் ரசிகர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. வேற்று மொழிப் படங்களுக்கு மிகக் குறைந்த அளவில் ரசிகர்கள் வந்தனர்.
இந்த வாரம் இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளதால் தியேட்டர்கள் மீண்டும் பழையபடி சூடு பிடிக்க வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 9ம் தேதி விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ள 'லாபம்' படம் தியேட்டர்களில் வெளியாகிறது. அதற்கு மறுநாள் வினாயகர் சதுர்த்தி அன்று அரவிந்த்சாமி, கங்கனா ரணவத் மற்றும் பலர் நடித்துள்ள, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' வெளியாக உள்ளது.
இந்த இரண்டு படங்களும் தியேட்டர்களுக்கு மக்களை வரவழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தியேட்டர்களுக்கு வரும் மக்களைக் குறைக்கும் விதமாக செப்டம்பர் 10ம் தேதி ஓடிடி தளத்தில் சந்தானம் நடித்துள்ள 'டிக்கிலோனா' படமும், அன்றைய தினம் மாலை டிவியில் நேரடி வெளியீடாக விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்' படமும் வெளியாகிறது.
எப்படியோ தியேட்டர்களில் இரண்டு, ஓடிடி, டிவியில் இரண்டு படங்கள் என இந்த வாரம் புதுப் படங்களின் ரிலீஸ் வாரமாக அமையப் போகிறது.