'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் | நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா |

படப்பிடிப்பு முடிந்து விடைபெறும் முக்கிய நடிகர் நடிகைகளை மரியாதை செய்து அனுப்பி வைக்கும் புதிய கலாச்சாரத்தை இயக்குனர் ஹரி தொடங்கி வைத்துள்ளார். ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் பழனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் வில்லனாக கேஜிஎப் படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. கருடா ராம் நடிக்க வேண்டிய காட்சிகள் நேற்றுடன் முடிந்தது.
அவரை வழியனுப்பும் பொருட்டு படக்குழு மிகப்பெரிய கொண்டாட்டத்துடன், அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்கள். இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் மற்றும் இணை தயாரிப்பாளர் அருண்குமார் ஆகியோர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதுகுறித்து கருடா ராம் கூறியதாவது: கேஜிஎப் படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன். ஆனால் இது போல் எந்த ஒரு படக்குழுவும் என்னை கொண்டாடியதில்லை. இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குநர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் . என்றார்.