எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
விஜயகாந்த் உடல்நலப் பிரச்னையின் காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் அவருடைய பிறந்தநாளன்று வெளியிட்ட அறிக்கையில் சிகிச்சை பெறுவதற்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி மகன் சண்முக பாண்டியனுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்றார்.
தொண்டையில் தொற்று, நடைபயிற்சி உள்ளிட்டவற்றுக்காக துபாயிலேயே தங்கி சிகிச்சையை எடுத்து வரும் விஜயகாந்த், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில், ‛நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம், என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கால் மேல் கால் போட்டுக்கொண்டு விஜயகாந்த் அமர்ந்துகொண்டு செல்போனில் திரைப்படம் பார்க்கும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.