எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பவன் கல்யாண், தற்போது ராணாவுடன் இணைந்து பீம்லா நாயக் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது. பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் இந்த படத்தில் டீசர் வெளியிடப்பட்டது மேலும் இந்த படம் இந்த வருஷத்திலேயே வெளியாக உள்ளது என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தப்படத்தை முடித்ததும், அடுத்ததாக ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் பவன்கல்யாண். ஏற்கனவே இந்த கூட்டணி கப்பார் சிங் படத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற கூட்டணி தான். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேசி முடித்துவிட்டாராம் ஹரிஷ் சங்கர். ஏற்கனவே அவரது இயக்கத்தில் துவ்வாட ஜெகநாதம் மற்றும் கத்தலகொண்டா ராஜு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் பூஜா ஹெக்டே. அதேசமயம் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரியாமணியிடம் பேசி வருகிறாராம் ஹரிஷ் ஷங்கர்.