ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பவன் கல்யாண், தற்போது ராணாவுடன் இணைந்து பீம்லா நாயக் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது. பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் இந்த படத்தில் டீசர் வெளியிடப்பட்டது மேலும் இந்த படம் இந்த வருஷத்திலேயே வெளியாக உள்ளது என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தப்படத்தை முடித்ததும், அடுத்ததாக ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் பவன்கல்யாண். ஏற்கனவே இந்த கூட்டணி கப்பார் சிங் படத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற கூட்டணி தான். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேசி முடித்துவிட்டாராம் ஹரிஷ் சங்கர். ஏற்கனவே அவரது இயக்கத்தில் துவ்வாட ஜெகநாதம் மற்றும் கத்தலகொண்டா ராஜு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் பூஜா ஹெக்டே. அதேசமயம் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரியாமணியிடம் பேசி வருகிறாராம் ஹரிஷ் ஷங்கர்.