பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் சேதுபதி, வாழ்க்கையில் தான் சந்தித்த அவமானங்கள் குறித்து மாஸ்டர் செப் ஷோவில் பேசினார். மேலும் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர் கருத்துகளை கூறினார்.
மாஸ்டர் செப் நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த ஷோ தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இன்று அந்த மூன்று பேருக்கும் இரண்டாம் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதனையடுத்து நிகழ்கியில் பேசியுள்ள விஜய் சேதுபதி, ஆரம்ப கட்டத்தில் என்னை ஹீரோ மூஞ்சி இல்லை என சொல்வார்கள். என்னை ஏன் அவன் தவறாக நடத்துகிறார்கள், ஏன் கலாய்க்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் இருந்தது. அதற்கான பதிலை நான் எனக்குள்ளே தேட ஆரம்பித்தேன். வேலை என்பது வெளியே நடப்பது இல்லை, நம் உள்ளே நடப்பது." என கூறி போட்டியாளர்களுக்கு ஊக்கம் வகையால் பேசினார். மாஸ்டர் செப் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.