ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெற்றது. அந்த விழாவில் 'சூரரைப் போற்று' படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் என இரண்டு விருதுகள் கிடைத்தது.
கொரானோ சூழல் காரணமாக விழா நிகழ்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. விருதுகள் வென்ற பிறகு வீடியோ மூலம் சூர்யாவும் நன்றி தெரிவித்துப் பேசினார். அந்த விருதுகள் சூர்யாவிற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விருதுகளை சூர்யா, மனைவி ஜோதிகா, தயாரிப்பாளர் கற்பூர சுந்தர பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து பிரித்தார். அந்த வீடியோவை படத்தைத் தயாரித்த 2 டி நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டது.
இரண்டு விருதுகளை தனது கணவர் வென்றதற்கு ஜோதிகா மிகவும் மகிழ்ந்து தொடர்ந்து கைதட்டிக் கொண்டே இருந்தார். ஓடிடியில் வெளியான படமாக இருந்தாலும் 'சூரரைப் போற்று' படம் ரசிகர்களைச் சென்றடைந்தது. படம் வெளியாகி ஒரு வருடம் ஆகப் போகிறது. இருந்தாலும் இன்னமும் ஓடிடியில் படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு கூட ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் 'சூரரைப் போற்று' படப் பாடலான 'கையிலே ஆகாசம்' பாடல் தன்னைக் கண்ணீர் விட வைத்தாக பாராட்டி எழுதியிருந்தார்.