பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும் மற்றும் சமீப வருடங்களாக தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். தற்போது அவர் நடித்துள்ள விக்ராந்த் ரோனா என்கிற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் சுதீப். இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது
சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சுதீப், பிறந்தநாள் சிறப்பு தரிசனமாக, சாமுண்டீஸ்வரி கோவில் சென்று வழிபட்டுள்ளார் அவருடன் அவரது குடும்பத்தாரும் மிக நெருங்கிய நண்பர்கள் சிலரும் சென்றிருந்தனர். சுதீப்பின் எதிர்பாராத திடீர் வருகையால் கோவிலில் ரசிகர்கள் கூடிவிட அவர்களை கலைத்து, சுதீப்பை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்குள் போலீசார் ரொம்பவே திணறித்தான் போனார்கள்.