கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் சூரரை போற்று. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த படத்திற்கான பட்டியலில் தேர்வான ஒரே இந்திய படம் இதுதான். பின்னர் கோல்டன் குளோப் விருது விழா உள்ளிட்ட பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இலவச விநியோக உரிமை என்ற முறையில் திரையரங்குகளுக்கு, படத்தை தயாரித்த 2டி நிறுவனம் கொடுக்கவுள்ளது. அதாவது படத்தை திரையிட்டு மொத்த வசூலையும் திரையரங்குகளும் திரையரங்கு அதிபர் சங்கமும் எடுத்துக் கொள்ளலாம். தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் உடன்பாடு ஏற்பட்டு இந்த வாரத்திலேயே படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
முன்னதாக ஓடிடியில் தொடர்ந்து சூர்யா நடித்த, தயாரித்த படங்கள் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யா மீது அதிருப்தியில் இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. திரையரங்குகளுக்கு ரசிகர்களை மீண்டும் இழுக்க சூரரைப்போற்று உதவலாம்.