லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் ஜார்ஜ் சம்பந்தப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாவிலிருந்து நீக்கினார். இதனால் இருவருக்கும் பிரச்னை என்று கூட செய்தி வந்தது.
சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் முன்பை போலவே வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வாழ்ந்து வருகிறார். குழந்தை பிறந்த பின்னர் எமி ஜாக்சன் தனது பழைய புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்தார்.
குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே மீண்டும் பழைய உடலமைப்புக்கு திரும்பினார். அதைக் காட்டும் வகையில் சமீபத்தில் படுகவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளார். இந்நிலையில் எமி ஜாக்சன் தன்னுடைய பிகினி உடையை காயப்போட்டுள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டு. சம்மர் முடிந்து விட்டது அதான் இப்படி என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த சமூகவலைதள ரசிகர்கள் தங்கள் அருவருப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.