நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? |
கன்னடத்தில் நார்தன் இயக்கத்தில் வெளிவந்த 'முப்டி' என்ற படத்தை தமிழில் ரீமேக் படமாக சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க 2019ம் ஆண்டு ஆரம்பித்தார்கள். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்தப் படக்குழுவை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் சிம்பு வெளியேறியதாக தகவல் வெளியானது. அதன்பின் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவேயில்லை. தொடர்ந்து நடந்த பஞ்சாயத்துகளுக்குப் பிறகு சிம்பு மீண்டும் நடிக்க சம்மதித்தார்.
அதன்பின் படத்தை ஆரம்பத்தில் இயக்கிய நார்தன் படத்தை விட்டு விலகினார். அவருக்குப் பதிலாக 'சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
'பத்து தல' என படத்திற்குப் பெயர் வைத்து அதன் போஸ்டரை படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானை வைத்து வெளியிட்டார்கள். சிம்புவின் மற்ற படங்களுக்கான பழைய பஞ்சாயத்துகள் சமீபத்தில்தான் முடிந்தது. அதனால், இப்படத்தையும் சிக்கலில்லாமல் இன்று முதல் ஆரம்பித்திருக்கிறார்கள்.
படத்தில் நடிக்கும் கவுதம் கார்த்திக் படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ஒரு புதிய ஆரம்பம், நீண்ட நாட்களாக நான் காத்திருந்த ஒரு பயணத்தின் ஆரம்பம், முதல் நாள், பத்து தல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்பு படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் மீண்டும் படமாக்கப்படும் என்று தெரிகிறது. 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துக் கொண்டே இப்படத்திலும் சிம்பு நடிக்க உள்ளாராம்.