லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
கன்னடத்தில் நார்தன் இயக்கத்தில் வெளிவந்த 'முப்டி' என்ற படத்தை தமிழில் ரீமேக் படமாக சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க 2019ம் ஆண்டு ஆரம்பித்தார்கள். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்தப் படக்குழுவை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் சிம்பு வெளியேறியதாக தகவல் வெளியானது. அதன்பின் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவேயில்லை. தொடர்ந்து நடந்த பஞ்சாயத்துகளுக்குப் பிறகு சிம்பு மீண்டும் நடிக்க சம்மதித்தார்.
அதன்பின் படத்தை ஆரம்பத்தில் இயக்கிய நார்தன் படத்தை விட்டு விலகினார். அவருக்குப் பதிலாக 'சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
'பத்து தல' என படத்திற்குப் பெயர் வைத்து அதன் போஸ்டரை படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானை வைத்து வெளியிட்டார்கள். சிம்புவின் மற்ற படங்களுக்கான பழைய பஞ்சாயத்துகள் சமீபத்தில்தான் முடிந்தது. அதனால், இப்படத்தையும் சிக்கலில்லாமல் இன்று முதல் ஆரம்பித்திருக்கிறார்கள்.
படத்தில் நடிக்கும் கவுதம் கார்த்திக் படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ஒரு புதிய ஆரம்பம், நீண்ட நாட்களாக நான் காத்திருந்த ஒரு பயணத்தின் ஆரம்பம், முதல் நாள், பத்து தல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்பு படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் மீண்டும் படமாக்கப்படும் என்று தெரிகிறது. 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துக் கொண்டே இப்படத்திலும் சிம்பு நடிக்க உள்ளாராம்.