பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து படங்களைத் தயாரித்து வருகிறார்கள். அப்படி நடிகர் சூர்யாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமாக 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு பல படங்களைத் தயாரித்தது. அந்த நிறுவனத்தின் முழு பொறுப்பையும் சூர்யாவுடன் சிறு வயதிலிருந்தே நண்பராக இருக்கும் ராஜசேகர் பாண்டியன் தான் கவனித்து வந்தார்.
மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்களது நட்பில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல். அதற்கு முன்பாகவே, 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இனி படத் தயாரிப்பில் ஈடுபடாது என்ற தகவலும் வெளிவந்தது. அந்நிறுவனம் தயாரித்து கடைசியாக வந்த 'ரெட்ரோ' படமும் வியாபார ரீதியாக வசூலைப் பெறவில்லை. இதனிடையே, சூர்யா தரப்பில் 'ழகரம்' என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். அது குறித்த செய்தியையும் நாம் இதற்கு முன்பே வெளியிட்டிருந்தோம்.
இனி, 'ழகரம்' தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில்தான் சூர்யா படங்களைத் தயாரிக்கப் போகிறாராம். அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு குறித்து தீபாவளி அன்றோ, தீபாவளிக்குப் பிறகோ வெளியாகலாம் என்கிறார்கள்.