ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நானும் ரெளடிதான், இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து மீண்டும் விஜயசேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. விக்னேஷ்சிவன் இயக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. விஜய சேதுபதி - நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாகிறது.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற நயன்தாரா அங்குள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்கியிருந்தார். இந்த தகவல் பரவியதை அடுத்து படப்பிடிப்புக்கு செல்லும்போது நயன்தாராவை பார்த்து விட வேண்டும் என்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அந்த ஓட்டலின் முன்பு கூடியிருக்கிறார்கள். இதனால் நயன்தாரா படப்பிடிப்புக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து பாதுகாவலர்களை வரவைத்து ரசிகர்களின் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளார் நயன்தாரா. இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.