மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் இந்த படம் வெளியானதில் இருந்தே அரசியல் வட்டாரங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் வட சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை கதைக்களத்தில் அரசியலையும் கலந்து படமாக்கியிருந்தார் பா.ரஞ்சித்.
குறிப்பாக, திமுகவின் கட்சிக்கொடி, சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டதோடு, நெருக்கடி காலகட்டத்தில் திமுகவினரை சிறையில் அடைக்கப்பட்ட காட்சிகளும் படத்தில் இடம் பெற்றது. அதேசமயம் எம்ஜிஆரைப்பற்றிய காட்சிகள் இல்லாததை சுட்டிக்காட்டி அப்போதே அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் திமுகவின் பிரச்சார படம் போல் இருப்பதாகவும், உண்மைக்கு புறம்பான காட்சிகள் உள்ளதாகவும் எதிர்ப்புக்குரல் கொடுத்தார்கள். அதோடு எம்ஜிஆரும் குத்துச் சண்டையில் ஆர்வமாக இருந்தவர். அப்படியிருக்க அவரை எப்படி புறக்கணிக்கலாம் என்று பா.ரஞ்சித்திற்கு எதிராக அதிமுகவினர் குரல் கொடுத்தனர்
இந்தநிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை படத்தில் உண்மைக்கு புறம்பான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அதை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் பா.ரஞ்சித் மீது சட்டரீதியான நடவடிக்கை பாயும் என்றும் அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.