என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
கடந்த மாதம் 25ம் தேதி நடிகை யாஷிகா தனது தோழி பவனி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதி ஒன்றுக்கு இரவு விருந்துக்கு சென்று விட்டு நள்ளிரவில் காரில் சென்னை திரும்பினார். அப்போது யாஷிகா ஆனந்த் கார் ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா ஆனந்தின் தோழி பவனி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில் பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த் உட்பட 3 பேரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் யாஷிகா ஆனந்துக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் யாஷிகா ஆனந்த் சிகிச்சை பெறும் போட்டோ வெளியாகியுள்ளது.
இடது காலில் பெரிய கட்டுடன் உள்ளார், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பெட்டில் படுத்த படுக்கையாக கிடக்கிறார் யாஷிகாவின் இந்த போட்டோ இணையத்தில் பரவி வருகிறது.
"யாஷிகா எலும்புகள் சரியாகி அவர் எழுந்து நடக்கவே 6 மாதங்கள் வரை ஆகும். அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உரிய படுக்கை வசதிகளுடன் வீட்டில் இருக்கலாம். அவருக்கு எப்போதும் உதவிக்கு ஒரு ஆள் வேண்டும்" என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால் தனது தோழி நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் யாஷிகா.
யாஷிகா பூரண நலம் பெற்றாலும் முன்புபோல அவர் வேகமாக நடக்கவோ, நடனமாடவோ முடியாது. என்கிறார்கள்.