ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரகுநாதன் என்பவர் தயாரிக்கிறார். சரவணன், ஜாக்குலின், டேனியல், மைனா நந்தினி, சிங்கம் புலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நடிகர்கள் அந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது சேரன் கீழே விழுந்து அவருக்கு 8 தையல் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குனர் நந்தா பெரியசாமி கூறியபோது "தயாரிப்பாளர் ரகுநாதன் இந்தப் படத்திற்காக செட் அமைப்பதற்கு பதிலாக 80 லட்சம் ரூபாய்க்கு புதிதாக பெரிய பிரம்மாண்டமான வீடு கட்ட ஆரம்பித்தார். அந்த வீடுதான் கதைக்களம். கதைப்படி சேரன் வீட்டை சுற்றி பார்க்கும் போது கீழே விழுமாறு காட்சி. சரவணன் அண்ணனாகவும் சேரன் தம்பியாக நடித்து வருகின்றனர். கீழே விழும் காட்சியில் சேரன் நிஜமாகவே வழுக்கி விழுந்துவிட்டார் . அவருக்கு எட்டு தையல் போடப்பட்டது. தையல் போடப்பட்ட அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நடித்துக் கொடுத்தார். இன்று காலை தான் அவருக்கு தையல் பிரிக்கப்பட்டது. அந்த வலியிலும் கடந்த மூன்று நாட்கள் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தார். இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று தெரிவித்தார். எல்லாம் முடிந்த பிறகு தான் நான் சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.