சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த விவகாரம் பாலிவுட்டையே கலக்கி வருகிறது. கோடி கணக்கில் பணம் வைத்திருக்கும் இவர் ஏன் இந்த இழிவான காரியத்தில் இறங்கினார் என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ராஜ் குந்த்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனைவி ஷில்பா ஷெட்டி என் கணவர் ஆபாச படம் எடுக்கவில்லை என்று ஒரு புறம் கணவருக்கு பரிந்து பேசினாலும், இன்னொரு பக்கம் கணவரால் என் வாழ்க்கை, மரியாதை எல்லாம் போச்சு என்றும் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரங்கள் நிச்சயம் ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்திருக்கும், அவர் இதற்கு உதவி இருக்க கூடும். அல்லது கண்டு கொள்ளாமல் இருந்திருக்க கூடும். இரண்டுமே சட்டப்படி தவறானது. எனவே குற்றவாளிக்கு உதவியவர் அல்லது குற்றத்தை மறைத்தவர் என்கிற வகையில் விரைவில் ஷில்பா ஷெட்டி கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் வங்கி கணக்கு விபரத்தையும், கணவரின் நடவடிக்கை குறித்த ஷில்பாவின் வாக்குமூலத்தையும் எழுத்து வடிவில் கேட்டிருக்கிறது போலீஸ். ஏற்கெனவே ஒரு முறை போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போலீஸ் உயர் அதிகாரி, "நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தற்போதைய தருணத்தில் குற்றமற்றவர் என்ற நற்சான்று வழங்க முடியாது" என்று கூறியுள்ளார். இந்த நிமிடம் வரை ஷில்பா ஷெட்டிக்கு நேரடியான தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை. சிக்கினால் அடுத்த நிமிடமே கைது செய்யப்படுவார் . என்கிறார்கள்.