75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? |

அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் எதையாவது பேசி சிக்கலை இழுத்துக் கொள்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்.. சில விஷயங்களில் கோபமாகும் எதிர் தரப்பினர் கண்கனாவுக்கு எதிராக நீதிமன்றத்தின் படியேறி விடுகின்றனர். அப்படித்தான் பாலிவுட் எழுத்தாளர் ஜாவேத் அக்தரை பற்றி மீடியா ஒன்றில் கங்கனா பேசப்போக, அதை தொடர்ந்து அவர் மீது மும்பை பெருநகர நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார் ஜாவேத் அக்தர்.
ஆனால் கங்கனாவோ நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கனாவின் வழக்கறிஞரிடம், அடுத்தமுறை கங்கனா நேரில் ஆஜாராக வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயமாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என கடுமை காட்டியுள்ளார் நீதிபதி.
தற்சமயம் பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பித்திருக்கும் கங்கனா தன் மீதுள்ள வழக்குகள் காரணமாக பாஸ்போர்ட் புதுப்பித்தலை தடுக்க கூடாது என உத்தரவிடும்படி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். ஆனால் பாடகர் ஜாவேத் அக்தர் தன்மீது தொடர்ந்திருந்த இந்த அவதூறு வழக்கை தனது மனுவில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.
இதனால் கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜாவேத் அக்தர் கோரிக்கை வைக்க, அந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் அந்த சந்தோஷத்தை கங்கனா அனுபவிப்பதற்குள் இன்னொரு நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கும் அளவுக்கு கடுமை காட்டியுள்ளது கங்கனா தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.