22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை யாரோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
இரண்டு விதமான படகுகளின் புகைப்படங்கள் தான் லீக் ஆகியுள்ளன. அவற்றைப் பார்க்கும் போதே 'பொன்னியின் செல்வன்' நாவலில் இடம் பெற்ற ஓவியங்களைப் போலவே அந்தப் புகைப்படங்களும் உள்ளன. நாவல் ரசிகர்களின் கற்பனையை உண்மையாக்கும் அளவிற்குத்தான் மணிரத்னம் படத்தை உருவாக்கி வருகிறார் என்பதற்கு அவை சாட்சியாக உள்ளன.
'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.