Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசை மேதைகளின் மதிப்பும், மகத்துவமும் தெரியவில்லை - இளையராஜா

22 ஜூலை, 2021 - 21:50 IST
எழுத்தின் அளவு:
No-one-know-the-value-of-Musicians-says-Ilayaraja

மறைந்த இசைமேதைகளின் மதிப்பும், மகத்துவமும் நமக்கு தெரியவில்லை என, இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். அவர் அளித்த பேட்டி: ஒரு பாடல் என்பது இன்று பூத்த மலர் போல இருக்க வேண்டும். பூத்த மலர் ஓரிரு நாளில் உதிர்ந்து விடும். ஆனால், பாடல் என்பது எப்போதும் மலராக, இளமையாக இருக்கும்.

அந்த பாடல் தான், மக்கள் மத்தியில் நிலைக்கும். ஆனால், என் பழைய பாடல்கள் இப்போது கேட்டாலும் புதுசாகவே இருக்கும். என் இசைப்பணி எப்போதும் போல, தொடர்ந்து கொண்டு இருக்கிறது. வெளிநாட்டில், பீத்தோவன் வாசித்த பியோனோ போன்ற வாத்திய கருவிகள் மற்றும் வீடு போன்றவற்றை அப்படியே பாதுகாத்து, பராமரிக்கின்றனர். இங்கு நம் இசைமேதைகளின் இசைக்கருவிகளை பாதுகாத்து வைத்துள்ளோமா; தியாகராஜா சுவாமிகள் தம்புரா எங்கே; முத்துசாமி தீட்சிதரின் வீணை எங்கே...

இதுகுறித்து, மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது, விழா ஒன்றில் பேசியுள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். நமக்கு அதன் மதிப்பு, மகத்துவம் தெரியவில்லை. பாரம்பரியத்தை பாதுகாப்பது போன்றதொரு விஷயத்தை செய்ய வேண்டும். என் இசையில் நான் பாடவேண்டும். வரும் தலைமுறை பின்பற்றும்படி, நான் நடந்து வருகிறேன். இசை மேதைகளுக்கு இங்கு சிலை வைக்கவில்லை என்பதை பார்க்கும் போது, நம் உணர்வு அப்படி இருக்கிறது அவ்வளவுதான். ரீமிக்ஸ் பாடல்களை எதிர்ப்பது என் வேலையல்ல. கேமராவில் என் முகத்தை காட்டக்கூடாது என, நினைக்கிறேன். என் இசையில் என்னை பார்க்கலாம்.


பேரக்குழந்தைகளுக்கு நான் எங்கே கற்றுத்தருகிறேன். குழந்தைகளிடமிருந்து தானே நாம் கற்க வேண்டியிருக்கிறது. அவர்கள்தானே நமக்கு எல்லாம் சொல்லித் தருகிறார்கள். அவர்களுக்கு இசையறிவும், ஆர்வமும் இருப்பது ஆச்சர்யம் இல்லை. எல்லாம் ரத்த உறவுகள்தானே. அப்படித்தான் இருக்கும். வாய்ப்பு வரும் போது அவர்களை எனது இசையில் பாட வைப்பேன்.

1000 படங்களை கடந்தாலும் இன்னும் புதுமையான விஷயம் போய்க்கொண்டு தான் இருக்கிறது. இன்னும் இசையமைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வருகிறார்கள். கொரோனா காரணமாக சினிமாவே டல்லாகத் தான் இருக்கிறது. விரைவில் நிலைமை மாறும்.



இவ்வாறு இளையராஜா கூறினார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பூஜா ஹெக்டேகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பூஜா ... அஜித்துக்கு நன்றி சொல்லும் 'சார்பட்டா' வில்லன் ஜான் அஜித்துக்கு நன்றி சொல்லும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

s t rajan - chennai,இந்தியா
23 ஜூலை, 2021 - 08:38 Report Abuse
s t rajan மதுரையில் தோன்றி இசையை நமக்கும் அதில் விளைந்த நற்பயனை எண்ணற்ற நற்பணிகளுக்கும் அர்ப்பணம் செய்து இந்திய சங்கீதக் கலை உலகளவில் ஜ்வலிக்க செய்த பாரத ரத்னா திருமதி எம். எஸ். அம்மா அவர்களுக்கு தமிழகத்தில் ஒரு நினைவுச் சின்னம் கூட அமைக்காத இந்த திராவிட சுயநல அரசியல்வாதிகளை என்ன செய்தால் தகும் ? அதே நேரத்தில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கொச்சை படுத்தியவருக்கு எண்ணற்ற சிலைகள், தெருப் பெயர்கள் ? இதுதான் திராவிட அரசியல் அநாகரிகம்
Rate this:
Manian - Chennai,ஈரான்
23 ஜூலை, 2021 - 00:51 Report Abuse
Manian அதற்கு அறிவும் ஆற்றலும் தேவை 69% போலி கோட்டாவியாதிகளிடம் அதை எதிர்பாக்க முடியுமா? பகுத்தறிவாளிகளுக்கு பெற்றோர்களே தேவை இல்லை என்று தெருவில் தள்ளுபவர்கள் அவர்கள் காசு, நகை, வீடு, நிலங்களை மட்டுமே பாதுகாக்க அல்லது விற்று டாஸ்மார்க் போகவே நேரமில்லையே முத்துசாமி அய்யர் வீணை,தியாகராசர் தம்பூரா அவசரத்துக்கு வென்னீர் அடுப்புக்கு பயன் பட்டுவிட்டதே அவங்க ஆரியர் அதனாலேயே நைனா அதை தடுக்க வில்லை இல்லாடி அங்களுக்குமே கலைமாமணி பட்டம் இல்லே கொடுக்கணும் பீத்தோவன் ஊர்லே யாருமே குளிக்கலையாமே பாரிசு ஷேனல் 5 செண்டு பூசிகிட்டானுக, ஆக பீத்தோவன் பியானே தப்பிக்கிச்சு
Rate this:
23 ஜூலை, 2021 - 08:23Report Abuse
சுரேஷ்இந்த ஆளுக்கு அறிவு இருக்கா....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in