ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
'பாகுபலி' படங்கள் மூலம் இந்தியத் திரையுலகமே வியந்து பார்த்த இயக்குனர் ராஜமவுலி தற்போது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார். அடுத்து மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை அவர் இயக்கப் போகிறார். பொதுவாக ராஜமவுலி இயக்கும் படங்களைப் பற்றிய தகவல் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியாகாது. அதே சமயம் அவருடைய அப்பா கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத், மகன் ராஜமவுலியின் படங்களைப் பற்றிய சில தகவல்களை அவ்வப்போது அளித்து வருகிறார்.
அந்த விதத்தில் அடுத்த படத்தைப் பற்றிய ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ராஜமவுலி, மகேஷ் பாபு இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் தான் நடக்க உள்ளதாம். அதற்கான தரவுகளை சேகரிப்பதற்காக பிரபல தென்னாப்பிரிக்க எழுத்தாளரான வில்பர் ஸ்மித் எழுதிய நாவல்களைப் படித்து வருகிறார்களாம்.
ராஜமவுலி 'ஆர்ஆர்ஆர்' படத்தை முடிப்பதற்கு முன்பாகவே அவருடைய அடுத்த படத்தைப் பற்றிய ஆர்வம் திரையுலகிலும், ரசிகர்களிடத்திலும் வந்துள்ளது.