தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் பத்மப்ரியா. அடுத்து சத்தம் போடாதே, மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.. அதேசமயம் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். ஆனால் திருமணம் செய்துகொண்ட பின் வாய்ப்புகள் குறைந்தது. மேலும் மீடூ தொடர்பான விவகாரத்தில் நடிகர் சங்கத்துடன் குறிப்பாக மோகன்லாலுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் சுத்தமாக பட வாய்ப்பே இல்லாமல் போனது.
இந்தநிலையில் தான் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் பத்மப்ரியா.. தற்போது மலையாளத்திலும் பிஜுமேனன் கதாநாயகனாக நடிக்கும் 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் பத்மப்ரியா. இது எழுத்தாளர் இந்துகொபன் எழுதிய 'அம்மினிப்பிள்ள வெட்டு கேஸ்' என்கிற நாவலை தழுவி உருவாகிறது. தற்போது மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி படத்தின் கதாசிரியரான ஸ்ரீஜித், இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.




