நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
நடிகர் ரஜினிகாந்தின் 168-வது படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த கலகலப்பான படமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் தான் மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்று சென்னை திரும்பினார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள காட்சிளை படமாக்குவதற்காக இன்று படக்குழு கோல்கட்டா செல்ல இருந்தனர். ஆனால் சில காரணங்களால் ரஜினி கோல்கட்டா செல்வது தள்ளிப் போய் உள்ளது. எனவே சென்னையில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை படக்குழுவினர் படமாக்க உள்ளனர்.
சென்னையில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. கோல்கட்டாவில் கூடுதலான நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி இருப்பதால் சில நாட்கள் கழித்து படக்குழு கோல்கட்டா செல்லலாம் என்று கூறப்படுகிறது.