ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில நாட்களுக்கு முன் தசாவதாரம் படம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் நடிகர் கமல். அப்போது அவரிடம் தசாவதாரம் படம் பிஹெச்டி என்றால், உங்களுடைய மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி மாதிரி.. அந்தப்பட உருவாக்கம் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என சோஷியல் மீடியா மூலமாக கோரிக்கை வைத்தார் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதற்கு கமலும் நேரம் வரும்போது அதுபற்றி பகிர்கிறேன் என கூறியிருந்தார்.
தற்போது மூத்த இயக்குனர்களான கே.பாலச்சந்தர், சிங்கிதம் சீனிவாசராவ், அனந்து, பாலுமகேந்திரா உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள கமல், அவர்கள் தனக்கு எப்படி கற்றுத்தந்தார்கள் என்பது பற்றியும் கூறியுள்ளார்.
அதேசமயம் அல்போன்ஸ் புத்ரன் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறும்போது, “என்னிடம் கோரிக்கை வைத்த அல்போன்ஸ் புத்ரனுக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா புத்திரன்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், அவர்களை போல என்னால் கற்றுக் கொடுக்க முடியாது.. காரணம் நான் ஆசரியர் அல்ல.. அந்த அளவுக்கு ஒரு தாயைப்போல என்னால் தியாகம் செய்ய முடியாது. நான் இப்போதும் ஒரு மாணவன் தான். அதுவும் சுயநலமிக்க மாணவன்” என்று கூறியுள்ளார்.
அதாவது தனது படங்களின்போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை மட்டுமே தன்னால் கூறமுடியும் என்றும், அவற்றை படமாக்கிய விதம் பற்றி தன்னால் கற்றுக் கொடுக்க முடியாது என்பதையும் அவரது பாணியில் 'தெளிவாக' விளக்கியுள்ளார் கமல். இந்த விளக்கத்துக்கு “ஒரு டன் நன்றிகள் சார்” என நன்றி கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்