'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
கடந்த சில நாட்களுக்கு முன் தசாவதாரம் படம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் நடிகர் கமல். அப்போது அவரிடம் தசாவதாரம் படம் பிஹெச்டி என்றால், உங்களுடைய மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி மாதிரி.. அந்தப்பட உருவாக்கம் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என சோஷியல் மீடியா மூலமாக கோரிக்கை வைத்தார் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதற்கு கமலும் நேரம் வரும்போது அதுபற்றி பகிர்கிறேன் என கூறியிருந்தார்.
தற்போது மூத்த இயக்குனர்களான கே.பாலச்சந்தர், சிங்கிதம் சீனிவாசராவ், அனந்து, பாலுமகேந்திரா உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள கமல், அவர்கள் தனக்கு எப்படி கற்றுத்தந்தார்கள் என்பது பற்றியும் கூறியுள்ளார்.
அதேசமயம் அல்போன்ஸ் புத்ரன் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறும்போது, “என்னிடம் கோரிக்கை வைத்த அல்போன்ஸ் புத்ரனுக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா புத்திரன்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், அவர்களை போல என்னால் கற்றுக் கொடுக்க முடியாது.. காரணம் நான் ஆசரியர் அல்ல.. அந்த அளவுக்கு ஒரு தாயைப்போல என்னால் தியாகம் செய்ய முடியாது. நான் இப்போதும் ஒரு மாணவன் தான். அதுவும் சுயநலமிக்க மாணவன்” என்று கூறியுள்ளார்.
அதாவது தனது படங்களின்போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை மட்டுமே தன்னால் கூறமுடியும் என்றும், அவற்றை படமாக்கிய விதம் பற்றி தன்னால் கற்றுக் கொடுக்க முடியாது என்பதையும் அவரது பாணியில் 'தெளிவாக' விளக்கியுள்ளார் கமல். இந்த விளக்கத்துக்கு “ஒரு டன் நன்றிகள் சார்” என நன்றி கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்