மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
தமிழில் ஜெயம் படம் மூலமாக அறிமுகமாகி, அந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை சதா. அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதற்கு முன்னதாக, அறிமுகமான காலகட்டத்தில் சதாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வரவேற்பு இருந்ததால், நிறைய படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வந்தார் அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தேடிவந்தது, ஆனால் சில சூழல் காரணமாக அவரால் அதை ஏற்க முடியாமல் போனது.
இது குறித்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சதா. சந்திரமுகியில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்தும் சில சூழல்கள் காரணமாக, அதில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் சில சமயம் அழுதும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சதா.
அதேசமயம் சினிமா வட்டாரங்களில் முதலில் இவரை மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அழைத்ததாகவும் அதனால் இவர்தான் நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என கூறி மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் அந்த சமயத்திலேயே சொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.