புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் கடந்த வாரம் முதல் ஆரம்பமாகின. ஆனால், இன்று முதல்தான் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்', தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத படம் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகள் மும்முரமாக ஆரம்பமாகியுள்ளன.
அரசு அறிவித்துள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட்டே படப்பிடிப்புகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் பாதுகாப்பாக இருக்க பல நடிகர்கள், நடிகைகள் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.
தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை காண்பித்த பிறகுதான் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து விதமான பணியார்களையும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகே படப்பிடிப்புகளுக்கு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட படக்குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இன்று ஆரம்பமாகியுள்ள விஜய்யின் 'பீஸ்ட்' படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், படத்தின் நாயகன் விஜய் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பது குறித்த தகவல் இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக செய்திகள் வந்தன. அப்படி அவர் தடுப்பூசி போட்டிருந்தால் அதை வெளியில் அறிவித்தால், அவரது ரசிகர்களும் எந்தத் தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்வார்களே என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
அஜித்தும் விரைவில் 'வலிமை' படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்றும் சொல்கிறார்கள். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், யோகி பாபு, சூரி உள்ளிட்ட பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நடிகைகள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
விஜய்யும், அஜித்தும் அவர்களது ரசிகர்களின் நலன் கருதி தடுப்பூசி போட்டுக் கொண்டதன் தகவலை வெளியிடலாமே ?.