இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரஜினியின் அமெரிக்க பயணம், அவரது உடல்நல பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினார் நடிகை கஸ்தூரி. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் ‛‛அலைபேசியில் விவரத்தை சொன்னார்கள். நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. நல்ல விஷயம் காத்திருக்கிறது. தலைவரை வரவேற்க தமிழகம் தயாராகட்டும்'' என கஸ்தூரி டுவீட் செய்தார்.
இந்நிலையில் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் டுவிட்டரில், ‛‛தலைவரோ ,தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை , எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம்'' தெரிவித்துள்ளார்.
இதற்கு, ‛‛என்னை அழைத்து பேசியது கங்கை அமரன். அவர் பகிர்ந்த விவரங்களை நான் யாரிடமேனும் சரி பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க வில்லை'' என கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
ரஜினிவை வைத்து கஸ்தூரி ஏற்படுத்திய கலகம் சமூகவலைதளங்களில் மீண்டும் பற்றிக் கொண்டுள்ளது. இதை வைத்து கஸ்தூரியை மீண்டும் ரசிகர்கள் வசை பாட தொடங்கிவிட்டனர்.