15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி |

கொரோனா கால ஊரடங்கு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. சின்னத்திரை படப்பிடிப்புகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதோடு புதிய புதிய சீரியல்கள் பற்றிய அறிவிப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் விஜய் டிவியில் 'தமிழும் சரஸ்வதியும்' என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் நக்ஷத்திரா நாகேஷ் மற்றும் தீபக் இணைந்து நடிக்க உள்ளனர்.
12ஆம் வகுப்பு தேர்வை பல முறை எழுதியும் பாஸ் செய்ய முடியாத பெண்ணாக சரஸ்வதி என்ற கேரக்டரில் நக்ஷத்திரா நடிக்கிறார். அவரைப்போலவே படிப்பு ஏறாத தமிழ் என்ற இளைஞனாக தீபக் நடிக்கிறார். படிக்காத இவர்களின் காதலும், வாழ்க்கையும் நகைச்சுவை கலந்து சொல்லப்பட இருக்கிறது. தீபக்கும், நக்ஷத்திராவும் தொகுப்பாளர்களாக இருந்து நடிகர், நடிகை ஆனவர்கள். அதேபோல இருவரும் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்கள்.