நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65ஆவது படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில், விஜய் 65ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளுக்கு முந்தின நாளான ஜூன் 21-ந்தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் சோசியல் மீடியாவில் இப்போதே பரபரப்பை ஆரம்பித்து விட்ட விஜய் ரசிகர்கள், இதுவரை விஜய் நடித்துள்ள 64 படங்களின் போட்டோக்களை வைத்து ஒரு ஸ்பெசல் போஸ்டரை சோசியல் மீடியாவில் டிரண்டிங் செய்கின்றனர்.
இதுஒருபுறம் இருக்க விஜய்யின் அரசியல் என்டரி குறித்த இன்னொரு போஸ்டரையும் வெளியிட்டு மேலும் பரபரப்பு கூட்டி வருகின்றனர் ரசிகர்கள். திண்டுக்கல் முழுதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற புகைப்படமும், ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட, தம்பி வா; தலைமை ஏற்க வா என்று அழைக்கும் விதமான வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தி.மு.க.,வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.