நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோ நாகார்ஜுனா, தமிழிலும் 'ரட்சகன், தோழா' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். திரையுலகில் அறிமுகமாகி 35 வருடங்கள் ஆனாலும், இன்னமும் தனக்கென தனி பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
டிவியில் 'மீலோ எவரு கோடீஸ்வரடு' நிகழ்ச்சியை மூன்று சீசன் தொகுத்து வழங்கியவர், அடுத்து மூன்றாவது முறையாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.
சினிமா, டிவியைத் தொடர்ந்து அடுத்து ஓடிடி தளத்திலும் கால் பதிக்க உள்ளாராம். கடந்த வருடத்திலிருந்தே அவரை வெப் தொடர்களில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது ஒரு முன்னணி ஓடிடி நிறுவனம் தயாரிக்க உள்ள தொடரில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் என டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
முந்தைய பேட்டி ஒன்றில் கூட தன்னிடம் இரண்டு வெப் தொடர்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறியிருந்தார் நாகார்ஜுனா. இரண்டாம் உலகப் போரை மையப்படுத்திய தொடர் ஒன்றும், டைம் டிராவல் பற்றிய தொடர் ஒன்றும் என இரண்டு கதைகள் அவரிடம் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் அவர் எதில் நடிக்கப் போகிறார் என்பது விரைவில் தெரிய வரும்.