‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோ நாகார்ஜுனா, தமிழிலும் 'ரட்சகன், தோழா' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். திரையுலகில் அறிமுகமாகி 35 வருடங்கள் ஆனாலும், இன்னமும் தனக்கென தனி பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
டிவியில் 'மீலோ எவரு கோடீஸ்வரடு' நிகழ்ச்சியை மூன்று சீசன் தொகுத்து வழங்கியவர், அடுத்து மூன்றாவது முறையாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.
சினிமா, டிவியைத் தொடர்ந்து அடுத்து ஓடிடி தளத்திலும் கால் பதிக்க உள்ளாராம். கடந்த வருடத்திலிருந்தே அவரை வெப் தொடர்களில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது ஒரு முன்னணி ஓடிடி நிறுவனம் தயாரிக்க உள்ள தொடரில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் என டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
முந்தைய பேட்டி ஒன்றில் கூட தன்னிடம் இரண்டு வெப் தொடர்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறியிருந்தார் நாகார்ஜுனா. இரண்டாம் உலகப் போரை மையப்படுத்திய தொடர் ஒன்றும், டைம் டிராவல் பற்றிய தொடர் ஒன்றும் என இரண்டு கதைகள் அவரிடம் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் அவர் எதில் நடிக்கப் போகிறார் என்பது விரைவில் தெரிய வரும்.