பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோ நாகார்ஜுனா, தமிழிலும் 'ரட்சகன், தோழா' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். திரையுலகில் அறிமுகமாகி 35 வருடங்கள் ஆனாலும், இன்னமும் தனக்கென தனி பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
டிவியில் 'மீலோ எவரு கோடீஸ்வரடு' நிகழ்ச்சியை மூன்று சீசன் தொகுத்து வழங்கியவர், அடுத்து மூன்றாவது முறையாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.
சினிமா, டிவியைத் தொடர்ந்து அடுத்து ஓடிடி தளத்திலும் கால் பதிக்க உள்ளாராம். கடந்த வருடத்திலிருந்தே அவரை வெப் தொடர்களில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது ஒரு முன்னணி ஓடிடி நிறுவனம் தயாரிக்க உள்ள தொடரில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் என டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
முந்தைய பேட்டி ஒன்றில் கூட தன்னிடம் இரண்டு வெப் தொடர்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறியிருந்தார் நாகார்ஜுனா. இரண்டாம் உலகப் போரை மையப்படுத்திய தொடர் ஒன்றும், டைம் டிராவல் பற்றிய தொடர் ஒன்றும் என இரண்டு கதைகள் அவரிடம் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் அவர் எதில் நடிக்கப் போகிறார் என்பது விரைவில் தெரிய வரும்.