ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகள் முன்பெல்லாம் டிவிக்களில் பேட்டி கொடுக்க மட்டும் தான் செல்வார்கள். அவர்களில் யாரையாவது டிவி நிகழ்ச்சியைத் தொகுக்கவோ, டிவி தொடர்களில் நடிக்கவோ அழைத்தால் அவ்வளவு கோபப்படுவார்கள்.
சினிமாவில் மார்க்கெட்டை இழந்தவர்கள் தான் டிவி பக்கம் செல்வார்கள் என்ற ஒரு இமேஜ் இருந்ததே அதற்குக் காரணம். ஆனால், போகப் போக அந்த நிலை மாறியது. கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, ஆர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஷால், விஜய் சேதுபதி என பலரும் டிவி பக்கம் பெரிய ஷோக்களை தொகுத்து வழங்கினார்கள்.
விஜய் சேதுபதி அடுத்து 'மாஸ்டர் செப்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியை கன்னடத்தில் 'நான் ஈ' சுதீப்பும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க உள்ளார்களாம். தமன்னா இதுவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியதில்லை. முதல் முறையாக இந்த 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார். இதற்காக அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.