26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியவர் நடிகை டாப்ஸி. தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிஸியான நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள டாப்ஸி தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என எல்லா கதாநாயகிகளை போலவே வழக்கமான பதிலை அளித்துள்ளார்.
அதேசமயம் இன்னொரு தகவலையும் அவர் கூறியுள்ளார், அதாவது எப்போது, தான் வருடத்திற்கு 2 படங்களில் மட்டும் நடிக்கும் அளவிற்கு நிலைமை மாறுகிறதோ, அப்போது திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் தற்சமயம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




