ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், அசின் மற்றும் பலர் நடித்த தசாவதாரம் படம் திரைக்கு வந்து நேற்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் தனி முத்திரை பதித்த படங்களில் இந்தப் படமும் ஒன்று. கமல்ஹாசன் பத்து விதமான வேடங்களில் இந்தப் படங்களில் நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார்.
படத்திலும் பிரம்மாண்டமான பல காட்சிகள் அமைந்து ரசிகர்களை வியக்க வைத்தது. அதற்கு சி.ஜி. என்கிறது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பமும் ஒரு காரணம். 13 வருடங்களுக்கு முன்பு ஒரு தரமான சி.ஜி.யாக அப்படத்தில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் சி.ஜி. சூப்பர்வைசர் ஆக இப்போது இயக்குனராக இருக்கும் கார்த்திக் ராஜு பணியாற்றி இருக்கிறார்.
![]() |
“திருடன் போலீஸ், உள்குத்து” ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜு. தற்போது கண்ணாடி, சூர்ப்பனகை, த சேஸ் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். தசாவதாரம் படம் பற்றிய அவரது அனுபவத்தை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “தசாவதாரம் 13 வருடங்கள், படத்தின் முதல் 40 நிமிட பிரம்மாண்ட விஷுவல் காட்சிகளில் பணியாற்றியது மிகவும் பெருமை. ஒவ்வொரு சி.ஜி.காட்சியும் இன்னும் பசுமையாக மனதில் உள்ளது. கற்றுக் கொண்ட மிகப் பெரும் அனுபவம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
![]() |