இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ், தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை தெலுங்கு மக்கள் நீண்ட நாட்களாக வைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி அது பற்றிய கோரிக்கையை வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தன்னுடைய 61வது பிறந்தநாளைக் கொண்டாடிய என்டிஆரின் மகனும், நடிகரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா டிவி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அரசியல், சினிமா பற்றி பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
என்டிஆருக்கு பாரத ரத்னா விருதுக்கான கோரிக்கை பற்றி அவரிடம் கேட்ட போது, “எனது அப்பா ஒரு போதும், அதிகாரத்துக்காகவோ, விருதுகளுக்காகவோ ஏங்கியதில்லை. எனது அப்பாவுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தால், யார் அது பற்றி முடிவெடுக்கிறார்களோ, அவர்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும். ஆனால், அவர் மக்களிடம் பெற்ற அன்போடு ஒப்பிடும் போது இதெல்லாம் ஒன்றுமில்லை,” என கோபமாகப் பேசினார்.
என்டிஆர் மறைந்து 25 வருடங்களாகிவிட்டது. சிலருக்கு மறைவுக்குப் பின்புதான் பாரத ரத்னா வழங்கப்பட்டது. என்டிஆர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆனாலும் அவரை விருதுக்காக பரிசீலிக்கவில்லை என்ற கோபம் தெலுங்குத் திரையுலகத்தினரிடம் அதிகமாக உள்ளது.