தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய் | ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா? | முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை | கேரள திரைப்பட விழாவில் திரையிட 19 படங்களுக்கு மறுப்பு : கேரளா அமைச்சர் காட்டம் | பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது | பிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை எதிர்த்து எம்ஜிஆர் போட்ட வழக்கு | திலீப் விஷயத்தில் மோகன்லால் இப்படி செய்யலாமா? : நடிகை கேள்வி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே காதல், கல்யாணம், தாயின் மரணத்தை சந்தித்த நடிகை | 'கில்லி' ரீ ரிலீஸ் வசூலை முறியடிக்குமா 'படையப்பா' ? | தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் |

பா.ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்த பிராங்களின் ஜேக்கப் இயக்கி உள்ள படம் ரைட்டர். சமுத்திரகனி, இனியா, மகேஸ்வரி, லிசி, சுப்பிரமணியம் சிவா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை பல தயாரிப்பாளர்கள் நிராகரத்திருக்கிறார்கள். இதுகுறித்து இயக்குனர் பிராங்களின் ஜேக்கப் கூறியிருப்பதாவது:
அட்டக்கத்தி படத்தில் இருந்து காலா வரையில் பா.ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்தேன். அவரிடம் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே ரைட்டர் கதையை எழுதி தனியாக படம் இயக்கலாம் என்று பல தயாரிப்பாளர்களை சந்தித்தேன், அவர்கள் எல்லாம் சிங்கம் மாதிரி சிறுத்தை மாதிரி, சாமி மாதிரி போலீஸ் கதை கொண்டு வாருங்கள் என்றார்கள்.
அடிதடி போலீஸ் பற்றியும், ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட் உள்ள போலீஸ் பற்றியும் நிறைய படங்கள் வந்து விட்டதே. இது ஒரு காவல் நிலையத்தின் ரைட்டரின் யதார்த்த வாழ்க்கை என்று சொன்னால், இந்த படத்துக்கு விருது வேண்டுமானால் கிடைக்கும், வசூல் வராது என்று சொன்னார்கள்.
சோர்ந்து இருந்த நேரத்தில் ரஞ்சித் அண்ணா கூப்பிட்டு என்ன கதை வைத்திருக்கிறாய் என்று கேட்டார். அப்போது நான் தயாராக வைத்திருந்த 3 கதைகளை சொன்னேன். அதில் அவர் தேர்வு செய்தது ரைட்டர் கதையை. அதோடு இந்த கதையில் சமுத்திரகனி நடித்தால் நன்றாக இருக்கும் என்ற அவரே அதையும் தேர்வு செய்தார். காலா படத்தில் சமுத்திரகனியோடு பணியாற்றியதால் அவரிடம் கதை சொன்னதுமே ஒப்புக் கொண்டார்.
இப்படித்தான் ரைட்டர் உருவானது. சமுத்திரகனி ஒரு காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிக் கொண்டு அதிகார வர்க்கத்துக்கும், நடுத்தர குடும்ப வாழ்க்கைக்கு இடையிலும் நடத்தும் போராட்டம்தான் கதை. காவல் துறைக்கும், மக்களுக்குமான இடைவெளியை இந்த படம் குறைக்கும். காவல்துறையில் உள்ளவர்களும் நம்மை போன்ற சராசரி மனிதர்கள்தான் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைக்கும். என்கிறார்.




