இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதும் சினிமா படப்பிடிப்புகள், டிவி படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதன் பின் தற்போது தான் முதல் தளர்வை நாளை முதல் அமல்படுத்த உள்ளார்கள்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளான மளிகை, காய்கறி கடைகள், பிளம்பிங், எலக்ட்ரிக்கல், மோட்டார் வாகன ரிப்பேர் கடைகள் ஆகியவற்றைத் திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள். இதன் மூலம் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி அடைந்தாலும் அத்தொழிலை நேரடியாகவும், மறைமுகவும் நம்பியுள்ள அனைவரின் வாழ்வாதாரமும் மீண்டும் மீட்டெடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பல தினசரித் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்திற்கான உழைப்பை நாளை முதல் தொடங்க உள்ளனர்.
அது போல சினிமா, டிவி ஆகியவற்றில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சினிமாவை நம்பி தான் தியேட்டர்களும் இருக்கின்றன. அவற்றைச் சார்ந்த பல இணை, துணை தொழில்களும் உள்ளன. கடந்த வருட கொரோனா அலையின் போதே தளர்வுகள் அறிவித்தபின் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அடுத்த தளர்வின் போது சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கான அனுமதி கிடைத்தால் அது அத்துறையினருக்கு பேருதவியாக இருக்கும் என எண்ணுகின்றனர். பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். அது போலவே தடுப்பூசி உள்ளிட்ட சில வரைமுறை, கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என திரையுலகினரும், டிவி உலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.