தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு மற்றும் இசையில் உருவான சுயாதீன இசை ஆல்பம் என்ஜாயி என்சாமி. இதனை அறிவு எழுதி பாடினார். அவருடன் சந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடினார். அமித் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். தனி இசை ஆல்பத்தில் கோடிக் கணக்கான பார்வையாளர்களை சென்று சேர்ந்து சாதனை படைத்தது.
ஆனால் இதுகுறித்து சந்தோஷ் நாராணயன் பேசியதில்லை. தற்போது அவர் இசை அமைத்துள்ள ஜெகமே தந்திரம் படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் அவர் இதுகுறித்து கூறியதாவது:
நான் என் இசை வாழ்க்கையை ஒரு சுயாதீன இசை அமைப்பாளராகத் தொடங்கினேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பல இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறேன். இப்போதும் வெளியிட்டு வருகிறேன். அதில் ஒன்று தான் என்ஜாயி என்சாமி. ஒரு இசை ஆல்பம் தாண்டி அதற்கு எனது சினிமா புகழை கொண்டு மேலும் விளம்பரம் தேட விரும்பவில்லை.
அந்த இசை ஆல்பத்தின் தகுதி அதனை உயரத்தில் கொண்டு வைக்கும். எனது சில இசை ஆல்பங்கள் கண்டு கொள்ளப்படாமலேயே கடந்து சென்றிருக்கிறது. அதற்காகவும் நான் கவலைப்படவில்லை. எனது பணி மக்களின் இசையை மக்களுக்கு தருவது. அந்த கடமையை செய்து வருகிறேன்.
நன்றாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டு கொண்டாடுவார்கள். இல்லாவிட்டால் எளிதாக கடந்து சென்று விடுவார்கள். என்னை பொருத்துவரை மக்கள் கொண்டாடினாலும், கடந்து சென்றாலும் எனது இசை இசைதான். என்றார்.