விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு மற்றும் இசையில் உருவான சுயாதீன இசை ஆல்பம் என்ஜாயி என்சாமி. இதனை அறிவு எழுதி பாடினார். அவருடன் சந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடினார். அமித் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். தனி இசை ஆல்பத்தில் கோடிக் கணக்கான பார்வையாளர்களை சென்று சேர்ந்து சாதனை படைத்தது.
ஆனால் இதுகுறித்து சந்தோஷ் நாராணயன் பேசியதில்லை. தற்போது அவர் இசை அமைத்துள்ள ஜெகமே தந்திரம் படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் அவர் இதுகுறித்து கூறியதாவது:
நான் என் இசை வாழ்க்கையை ஒரு சுயாதீன இசை அமைப்பாளராகத் தொடங்கினேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பல இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறேன். இப்போதும் வெளியிட்டு வருகிறேன். அதில் ஒன்று தான் என்ஜாயி என்சாமி. ஒரு இசை ஆல்பம் தாண்டி அதற்கு எனது சினிமா புகழை கொண்டு மேலும் விளம்பரம் தேட விரும்பவில்லை.
அந்த இசை ஆல்பத்தின் தகுதி அதனை உயரத்தில் கொண்டு வைக்கும். எனது சில இசை ஆல்பங்கள் கண்டு கொள்ளப்படாமலேயே கடந்து சென்றிருக்கிறது. அதற்காகவும் நான் கவலைப்படவில்லை. எனது பணி மக்களின் இசையை மக்களுக்கு தருவது. அந்த கடமையை செய்து வருகிறேன்.
நன்றாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டு கொண்டாடுவார்கள். இல்லாவிட்டால் எளிதாக கடந்து சென்று விடுவார்கள். என்னை பொருத்துவரை மக்கள் கொண்டாடினாலும், கடந்து சென்றாலும் எனது இசை இசைதான். என்றார்.