இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
2003ல் வெளிவந்த 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. அதன்பின் 'மழை, திருவிளையாடல் ஆரம்பம்' ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த 'சிவாஜி' படம் அவரை உச்சத்திற்குக் கொண்டு போனது. அந்தப் பெருமையுடன் நல்ல படங்களைத் தேர்வு செய்திருந்தால் தமிழில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பார்.
ஆனால், வடிவேலு கதாநாயகனாக நடித்த 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி தன்னுடைய இமேஜை அவராகவே கீழிறக்கிக் கொண்டார். அதன்பின் நான்கைந்து படங்களில் அவர் கதாநாயகியாக நடித்தாலும் ஒரு படம் கூட ஓடவில்லை. அனைத்துமே தோல்விப் படங்களாக அமைந்தது.
2018ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி கோஸ்சேவ் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. அதன்பின் ஸ்பெயின் நாட்டில் கணவருடன் வசித்து வந்தார். இடையில் சில தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார்.
ஸ்பெயினில் இருந்து தற்போது இந்தியாவிற்குத் திரும்பிவிட்டாராம் ஸ்ரேயா. தமிழ், தெலுங்கில் புதிய படங்களில் நடிக்க கவனம் செலுத்தப் போவதாக முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள். அதனால், சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தான் இன்னமும் கதாநாயகியாக நடிக்கத் தயார் என தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழில் அவர் நடித்துள்ள 'நரகாசூரன்' படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.