திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு தமிழ் மற்றும் இந்தியில் உருவான படம் இறுதிசுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். தேசிய குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிசுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை கட்டிவைத்து விட்டு முழு நேர நடிகை ஆனார்.
ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இறுதிசுற்று படத்தின் தெலுங்கு பதிப்பான குரு படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை.
இதன்பிறகு எந்த புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. இதனால் மீண்டும் குத்துச் சண்டைக்கே திரும்ப ரித்விகா சிங் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. தனி பயிற்சியாளரை நியமித்து வீட்டிலேயே குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.
குத்துச் சண்டை பயிற்சி எடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள அவர். "ஒரு பயிற்சியாளர் சொல்லித் தருவதை அப்படியே செய்வது கடினம், அடிக்கடி தவறி விழுகிறேன். முச்சு திணறுகிறேன்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.