மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நாஞ்சில் பி.சி.அன்பழகன், "நதிகள் நனைவதில்லை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு சவுந்தர்யன் இசையமைக்கிறார். பாடலை பாடுவதற்காக, கேரளாவிலிருந்து
வந்த ஜேசுதாஸ், ஒரே நாளில், இரண்டு பாடல்களை பாடிக்கொடுத்தது மட்டுமில்லாமல், பாடல்களை பல முறை போட்டுக்கேட்டு, உச்சரிப்பு, ஏற்ற இறக்கம் குறித்த சின்ன, சின்ன மாற்றங்களையும் செய்து, மீண்டும் அதனை பாடி பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார். இசையமைப்பாளரும், இயக்குனரும் நெகிழ்ந்து போய், பேசியபடி சம்பளத்தை ஜேசுதாசிடம் கொடுக்க, அந்தப் பணத்தில் பாதியை எடுத்துக்கொண்டு, மீதியை இயக்குனர் கையில் ஜேசுதாஸ் கொடுத்துள்ளார். இயக்குனர் பதறிப்போய், "ஏதும் குறையா சொல்லுங்க சார் என கேட்க, "குறையெல்லாம் இல்லை. மனசுக்கு திருப்தியாயிருக்கு. உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என, நினைத்தேன். என் சம்பளத்தில் பாதியை உனக்கு, பரிசாக தந்து விட்டேன் என, மகிழ்ச்சியுடன் கூற, நெகிழ்ந்து விட்டாராம், இயக்குனர்.