மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நடிகர் மகேஷ்பாபு தனது தந்தையும், முன்னாள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகருமான கிருஷ்ணாவின் 78ஆவது பிறந்த நாளான நேற்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதையடுத்து தந்தையின் பிறந்த நாளில் ஆந்திரா குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபாலம் என்ற கிராமத்து மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அளித்துள்ளார். அந்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்த தகவலையும், போட்டோக்களையும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் மகேஷ்பாபு. இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மகேஷ்பாபு இந்த கிராமத்தை ஏற்கனவே தத்தெடுத்து பல திட்டங்களை செயல்படுத்தி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.