‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
ராஜ் - டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் தி பேமிலிமேன்-2. இதுவரை சினிமாவில் மட்டுமே நடித்து வந்துள்ள சமந்தா முதன்முதலாக இந்த தொடர் மூலம் வெப்சீரியலுக்கு வந்துள்ளார். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோருடன் இணைந்து சமந்தாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த தொடரின் டிரெய்லர் வெளியானபோது விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளைப்போன்று சித்தரிக்கப்பட்டு அந்த தொடர் தயாரிக்கப்பட்டிருப்பதை அறிந்து தமிழ்நாட்டிலுள்ள தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அதோடு சமந்தாவும் பயங்கரவாத தமிழ்ப்பெண்ணாக நடித்துள்ளார்.
இதையடுத்து, தி பேமிலிமேன்-2 வெப் தொடரை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழர்களுக்கு எதிரான எந்த விசயமும் இந்த தொடரில் இல்லை. இது வெளியான பிறகு நீங்களே கொண்டாடுவீர்கள் என்று தொடரின் இயக்குனர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற பரபரப்பான சூழல் காரணமாக இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்தே சோசியல் மீடியாவிலும், மீடியாக்களிலும் பப்ளிசிட்டி செய்து வந்த சமந்தா, தற்போது சோசியல் மீடியாவிலும் தி பேமிலிமேன்-2 தொடர் குறித்த கருத்துக்களை வெளியிடாமல் உள்ளார். இந்த சர்ச்சை குறித்து சில மீடியாக்கள் தன்னை பேட்டிக்காக அழைத்தபோதும் மறுத்து விட்டாராம். மீடியாக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் பதிலளித்தால் அது இன்னும் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்து விடும் என்பதற்காக அவர் அமைதி காத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.