'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு |

ராஜ் - டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் தி பேமிலிமேன்-2. இதுவரை சினிமாவில் மட்டுமே நடித்து வந்துள்ள சமந்தா முதன்முதலாக இந்த தொடர் மூலம் வெப்சீரியலுக்கு வந்துள்ளார். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோருடன் இணைந்து சமந்தாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த தொடரின் டிரெய்லர் வெளியானபோது விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளைப்போன்று சித்தரிக்கப்பட்டு அந்த தொடர் தயாரிக்கப்பட்டிருப்பதை அறிந்து தமிழ்நாட்டிலுள்ள தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அதோடு சமந்தாவும் பயங்கரவாத தமிழ்ப்பெண்ணாக நடித்துள்ளார்.
இதையடுத்து, தி பேமிலிமேன்-2 வெப் தொடரை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழர்களுக்கு எதிரான எந்த விசயமும் இந்த தொடரில் இல்லை. இது வெளியான பிறகு நீங்களே கொண்டாடுவீர்கள் என்று தொடரின் இயக்குனர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற பரபரப்பான சூழல் காரணமாக இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்தே சோசியல் மீடியாவிலும், மீடியாக்களிலும் பப்ளிசிட்டி செய்து வந்த சமந்தா, தற்போது சோசியல் மீடியாவிலும் தி பேமிலிமேன்-2 தொடர் குறித்த கருத்துக்களை வெளியிடாமல் உள்ளார். இந்த சர்ச்சை குறித்து சில மீடியாக்கள் தன்னை பேட்டிக்காக அழைத்தபோதும் மறுத்து விட்டாராம். மீடியாக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் பதிலளித்தால் அது இன்னும் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்து விடும் என்பதற்காக அவர் அமைதி காத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.




